search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா: இணைந்து மரம் நட்டினார்கள்
    X

    இலங்கையில் விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா: இணைந்து மரம் நட்டினார்கள்

    சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மரங்களை வளர்க்கும் விதமாக கண்டியில் அனுஷ்கா ஷர்மா உடன் இணைந்து விராட் கோலி மரம் நட்டினார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருகிறார்கள். விராட் கோலி விளையாடும் சர்வதேச போட்டிகளை அனுஷ்கா ஷர்மா நேரில் கண்டுகளித்து வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த போட்டியையும் அனுஷ்கா ஷர்மா நேரில் பார்த்தார். அனுஷ்கா ஷர்மாவால்தான் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று ரசிகர்கள் விமர்சனம் எழுப்பினார்கள்.

    அதன்பின் விராட் கோலி ஆட்டத்தை அனுஷ்கா ஷர்மா நேரில் கண்டுகளித்தது கிடையாது. பொது இடங்களில் அதிக அளவில் சந்திப்பதும் கிடையாது. ஆனால், சமீப காலமாக விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாகவும் இணைந்து உலா வருகின்றன. சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு இருவரும் இணைந்து வந்தார்கள்.



    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் விராட் கோலி நியூயார்க் நகரில் விடுமுறை கழித்து வந்தார். அப்போது அனுஷ்கா ஷர்மாவும் உடன் சென்றிருந்தார்.

    தற்போது விராட் கோலி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடர் முடிந்து இன்று ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்ததும் அனுஷ்கா ஷர்மா இலங்கை சென்றார். அங்கு விராட் கோலியுடன் நேரத்தை செலவிட்டார். நேற்று அவர்கள் கண்டியில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றனர். அப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மரங்களை பாதுகாக்கும் விதமாக இருவரும் ஒன்றாக இணைந்து மரக்கன்றை நட்டினார்கள்.
    Next Story
    ×