search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்தகுதி இல்லாததால் ரெய்னா, யுவராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை - கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்
    X

    உடல்தகுதி இல்லாததால் ரெய்னா, யுவராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை - கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்

    ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


    புதுடெல்லி:

    ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் வெற்றிப்பெற்ற இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது.
     
    இதில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. யுவராஜ் சிங்கிற்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் யுவராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது கஷ்டம் என்றும் சில செய்திகள் வெளியானது.
     
    ரெய்னா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடிய போதும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை அணியுடனான போட்டிக்கும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். 
     
    இந்நிலையில், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்த காரணம் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருவருக்கும் யோ யோ என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தோல்வி அடைந்ததால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

    இந்த யோ யோ தேர்வில் குறிப்பிட்ட புள்ளிகள் எடுத்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறமுடியும். கடந்த 1990-களில் இந்த தேர்வில் 16 புள்ளிகள் எடுத்தாலே அணியில் இடம் பெறலாம். ஆனால் இப்போது இந்த அளவு 19.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த தேர்வில் 21 புள்ளிகள் எடுத்துள்ளார். 

    ஆனால், யுவராஜ் மற்றும் ரெய்னா இந்த அளவை எட்டாததே அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படாத்தற்க்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யுவராஜ் சிங் 16 புள்ளிகள் கூட எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
    Next Story
    ×