search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: யூ மும்பா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி
    X

    புரோ கபடி 2017: யூ மும்பா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

    புரோ கபடி போட்டியில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டங்களில் யூ மும்பா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

    லக்னோ:

    புரோ கபடி போட்டியில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டங்களில் யூ மும்பா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

    5-வது புரோ கபடி 'லீக்' போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் இன்று தொடங்கியது. இன்று முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    இன்று(18-ம் தேதி) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணியும் யூ மும்பா அணியும் மோதின. இந்த போட்டியில் யூ மும்பா அணி 37-34 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோத்தா அணியை வீழ்த்தியது. மும்பை அணியின் சபீர் பாபு 13 புள்ளிகள் எடுத்தார். உ.பி. அணியின் ரிஷாங் தேவாதிகா 14 புள்ளிகள் எடுத்தார்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. உ.பி. அணி 19 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    அதன்பின் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்களூர் புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி 30-28 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. ஜெய்ப்பூர் அணியின் ஜஸ்விர் சிங் 10 புள்ளிகள் எடுத்தார். பெங்களூர் அணியில் ரோகித்குமார் 11 புள்ளிகள் எடுத்தார். 

    இந்த போட்டியில் வெற்றி பெற்றும் ஜெய்ப்பூர் அணி 12 புள்ளிகளிடன் 'ஏ' பிரிவில் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. பெங்களூர் 21 புள்ளிகளுடன் 'பீ' பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    நாளை(19-ம் தேதி) நடைபெறும் போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் - யூ மும்பா அணிகளும், உ.பி. யோத்தா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன.
    Next Story
    ×