என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது புகார்
Byமாலை மலர்18 Aug 2017 3:46 AM GMT (Updated: 18 Aug 2017 3:47 AM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து உமர் அக்மல் அளித்த பேட்டியில், ‘எனது உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அணுகிய போது அவர் என்னை மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இன்ஜமாம், முஸ்தாக் அகமது ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. அத்துடன் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்யவும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது ஒருவரை திட்டிக் கொண்டு தான் இருப்பார். அவரது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து அனுமதி இல்லாமல் மீடியாக்களிடம் பேசியதற்கு விளக்கம் அளிக்கும் படி உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து உமர் அக்மல் அளித்த பேட்டியில், ‘எனது உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அணுகிய போது அவர் என்னை மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். இன்ஜமாம், முஸ்தாக் அகமது ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. அத்துடன் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்யவும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது ஒருவரை திட்டிக் கொண்டு தான் இருப்பார். அவரது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து அனுமதி இல்லாமல் மீடியாக்களிடம் பேசியதற்கு விளக்கம் அளிக்கும் படி உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X