search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி டென்னிஸ்: சானியா மிர்சா - ஷூவாய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    சின்சினாட்டி டென்னிஸ்: சானியா மிர்சா - ஷூவாய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி, காலிறுதி ஆட்டத்தில், ரோமானியாவின் இரினா கேமலியா பெகு - ராலுகா ஒலரு ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என சானியா ஜோடி கைப்பற்றியது. 

    இரண்டாம் செட்டை 7-6 என்ற செட் புள்ளிக்கணக்கில் ரோமானியா ஜோடி கைப்பற்றியது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாம் செட்டில் விறுவிறுப்பு அதிகரித்தது. இந்த செட்டை சானியா ஜோடி 10-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் நிலை வீரரான டோம்னிக் தெயிம், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை 7-6, 7-6 என்ற நேர் செட்களில் போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    ரோகன் போபண்ணா - இவான் டோடிக் ஜோடி, இரண்டாம் சுற்றில் ஜூவான் கேபல் - பேபியோ போக்னினி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கேபல் - போக்னினி ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மூன்றாவது சுற்றில் 10-8 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற போபண்ணா - டோடிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.


    Next Story
    ×