search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்ப்பு
    X

    பீரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்ப்பு

    மூன்றாவது பீரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், கவுகாத்தி ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.


    புதுடெல்லி:

    மூன்றாவது பீரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், கவுகாத்தி ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்திய பேட்மிண்டன் சங்கமானது கடந்த 2013-ம் ஆண்டு பீரிமியர் பேட்மிண்டன் லீக்கை தொடங்கியது. நட்சத்திர வீரர், வீராங்களைகள் பங்கேற்கும் இத்தொடரின் 3-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் 22-ம்தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

    முன்னதாக நடைபெற்ற தொடர்களில் டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், அவாத் வாரியர்ஸ் (லக்னோ), ஐதராபாத் ஹன்டர்ஸ், சென்னை ஸ்மா‌ஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் ஏற்கனவே விளையாடும் ஆறு அணிகளுடன் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், கவுகாத்தி ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

    டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6 கோடியாகும். உலக அளவில் பேட்மிண்டன் லீக் போட்டிக்கு அதிக பரிசுத்தொகை வழங்கும் தொடர் இது தான். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.3 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.5 கோடியும் பரிசுத்தொகையாக பெறும்.

    இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘இந்த சீசனுக்கான பீ.பி.எல். போட்டிக்கு அகமதாபாத், கவுகாத்தி அணிகளை வரவேற்கிறேன். இந்த போட்டி பிரபலமடைந்திருப்பதே புதிய அணிகளின் வருகை பிரதிபலிக்கின்றன’ என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×