search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரர் லயாண்டர் பயஸ் தனது ஜெர்மன் பார்ட்னர் அலெக்சாண்டர் ஜுவரெவுடன் இணைந்து, ஸ்பெயின் ஜோடி பெலிசியானோ லோபஸ்-மார்க் லோபஸ் ஜோடியை சந்தித்தார்.

    இப்போட்டியின் துவக்கத்தில் அபாரமாக ஆடிய பயஸ் ஜோடி முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றது. அதே வேகத்தில் அடுத்த செட்டையும் கைப்பற்ற போராடியது. ஆனால், அவர்களின் முயற்சியை தடுத்த ஸ்பெயின் ஜோடி அடுத்தடுத்து இரண்டு செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

    இதனால் 6-2 6(2)-7 6-10 என்ற செட்கணக்கில் பயஸ்-அலெக்சாண்டர் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.

    முதல் சுற்றில் பை பெற்றுள்ள ரோகன் போபண்ணா-இவான் டோடிக் ஜோடி நேரடியாக இரண்டாம் சுற்றில் விளையாட உள்ளது.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இவோ கார்லோவிக், ஜான் ஐஸ்னர் ஆகியோர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ், எலினா வெஸ்னினா, ஜூலியா ஜார்ஜஸ், முகுருசா, சிமோனா ஹாலெப் போன்ற முன்னணி வீராங்கனைகள் முன்னேறி உள்ளனர்.
    Next Story
    ×