search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி அணிகள் மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி அணிகள் மோதல்

    சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.

    சென்னை, நெல்லை, திண்டுக்கல், ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 27 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளன. இன்றுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 12 புள்ளியுடன் 2-வது இடத்தையும், காரைக்குடி காளை 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. 4-வதாக தகுதிபெறும் கோவை கிங்சா? திருவள்ளூர் வீரன்சா என்பது இன்று இரவு தெரியவரும்.

    ‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றனர்.

    இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மோதும்.

    ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தூத்துக்குடி பேரியாட்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ஆட்டங்களில் வென்றுள்ளது. திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகியவற்றை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை சூப்பர் ஜெயன்ட், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. தூத்துக்குடி அணியிடம் மட்டும் 27 ரன்னில் தோற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் கோபி நாத், தலைவன் சற்குணம், சசிதேவ், கார்த்திக், வசந்த் சரவணன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாய்கிஷோர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். யோமகேஷ், அலெக்சாண்டர் ஆகியோரும் முத்திரை பதிக்க கூடியவர்கள். கேப்டன் சதீஷ், அந்தோணி தாஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடந்த ஆண்டு 2 முறையும், தற்போது ஒரு முறையும் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோற்று இருந்தது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பழி தீர்க்குமா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் தான் மோதிய அன்றைய ஆட்டத்தில் வென்று இருந்தது.

    இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி கேப்டன் தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×