search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி 3 AM கேப்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் சொல்கிறார்
    X

    டோனி 3 AM கேப்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் சொல்கிறார்

    டோனி 3 AM கேப்டன். ஐ.பி.எல். தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவரை அதிகாலை 3 மணி வரை சந்திக்கலாம் என ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவருக்கு கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.

    ஆரம்பக்கட்டத்தில் டோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ். தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியின் கீழ் பணியாற்றியது குறித்து ஸ்டைரிஸ் கூறியுள்ளார். அப்போது ‘‘எனக்கு பிடித்த கேப்டன்களில் டோனியும், ஸ்டீபன் பிளம்மிங்கும் அடங்குவார்கள். கேப்டன் பதவியில் இருவரும் மாறுபட்ட வகையில் செயல்படுவார்கள்.



    பிளம்மிங் மிகவும் புத்திசாலியானவர். அவர் நம்மிடம் சொல்வதை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். டோனி மிகவும் அமைதியான கேப்டன். ஆனால், அணியில் வளர்ந்து வரும் வீரர்களின் கருத்தைக்கூட கேட்டறிவார். இது அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். நீங்கள் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், 19 வயதிற்குட்பட்ட வயதில் இருந்தாலும், ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டறிவார்.

    ஐ.பி.எல். தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது என்னவெனில், டோனியின் அறை அதிகாலை 3 மணி வரைக்கும் திறந்திருக்கும். யாராக இருந்தாலும் அவருடன் ஒரு கப் காபி அருந்தி கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளலாம். பிளமிங் மற்றும் டோனி ஆகியோர் மரியாதைக்குரியவர்கள்’’ என்றார்.
    Next Story
    ×