search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லேகலே டெஸ்ட்: ஹர்திக் பாண்டியா அதிரடி சதம் - இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவிப்பு
    X

    பல்லேகலே டெஸ்ட்: ஹர்திக் பாண்டியா அதிரடி சதம் - இந்தியா முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவிப்பு

    பல்லேகலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பல்லேகலே:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். 

    நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. தவான் 119 ரன்களும் ராகுல் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சகா 13 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து களமிறங்கிய சகா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ரன்களிலும், முகமது சமி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ரன்கள் குவித்தது. 

    உணவு இடைவேளைக்கு முன்னர் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து தில்ருவான் பெரராவிடம் ’கேட்ச்’ கொடுத்து மொத்தம் 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். உமேஷ் யாதவ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இலங்கை அணி பந்துவீச்சில் லக்‌ஷ்ன் சந்தகன் ஐந்து விக்கெட்களையும் மலிந்தா புஷ்பகுமாரா 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

    இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.
    Next Story
    ×