search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் முதல்நிலை வீராங்கனை பில்ஸ்கோவாவை வீழ்த்தினார் வோஸ்நியாகி
    X

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் முதல்நிலை வீராங்கனை பில்ஸ்கோவாவை வீழ்த்தினார் வோஸ்நியாகி

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவாவை வீழ்த்தி வோஸ்நியாகி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஒட்டாவா:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் கனடாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 13(நாளை) நிறைவடைகிறது. ஆடவர் பிரிவு போட்டிகள் மோண்ட்ரியல் நகரிலும், பெண்கள் பிரிவு போட்டிகள் டொரோண்டோ நகரிலும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல்நிலையில் உள்ள பில்ஸ்கோவா, ஆறாம்நிலை வீராங்கனையான வோஸ்நியாகியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வோஸ்நியாகி 7-5, 6-7(3), 6-4 என்ற செட் கணக்கில் பில்ஸ்கோவாவை வீழத்தினார். 

    பெண்கள் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஐந்தாம்நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, ஒன்பதாம்நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்விடோலினா எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    அதே சுற்றில் நடைபெற்ற மற்றொரு ஆட்டங்களில் இரண்டாம்நிலை வீராங்கனை ஹலிப்பும், நான்காம்நிலை வீராங்கனை முருகுஸாவும் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். மூன்றாம்நிலை வீராங்கனை கெர்பர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார். 
    Next Story
    ×