என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி
Byமாலை மலர்10 Aug 2017 1:33 PM GMT (Updated: 10 Aug 2017 1:33 PM GMT)
இந்திய ஆண்கள் சீனியர் மற்றும் பெண்கள் அணி தேர்வாளர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு திறமையாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்த தேர்வுக்குழுவும் ஒரு காரணம் நம்பப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு வெகுமதி வழங்கலாம் என நேற்று நடைபெற்ற பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு நேற்று டெல்லியில் கூடி இதுகுறித்து முடிவு செய்தது.
இந்தக் கூட்டத்தில் தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகக்குழுவில் உள்ள உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். அவருடன் சரண்தீப் சிங் மற்றும் தேவங் காந்தி ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பதவி ஏற்றனர். கடந்த 12 மாதங்களாக இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பெண்கள் தேர்வுக்குழுவில் ஹேமலதா கலா தலைவராக உள்ளார். லோபமுத்ரா பானர்ஜி மற்றும் ஷஷி குப்தா ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர்.
வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு திறமையாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்த தேர்வுக்குழுவும் ஒரு காரணம் நம்பப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு வெகுமதி வழங்கலாம் என நேற்று நடைபெற்ற பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு நேற்று டெல்லியில் கூடி இதுகுறித்து முடிவு செய்தது.
இந்தக் கூட்டத்தில் தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகக்குழுவில் உள்ள உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். அவருடன் சரண்தீப் சிங் மற்றும் தேவங் காந்தி ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பதவி ஏற்றனர். கடந்த 12 மாதங்களாக இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பெண்கள் தேர்வுக்குழுவில் ஹேமலதா கலா தலைவராக உள்ளார். லோபமுத்ரா பானர்ஜி மற்றும் ஷஷி குப்தா ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X