search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 4-வது தோல்வி
    X

    புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 4-வது தோல்வி

    ஐந்தாவது புரோ கபடி லீக் தொடரில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்து உள்ளது.
    ஐதராபாத்:

    5-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் (ஏ பிரிவு) மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 30-24 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வென்றது.

    முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாசை வென்ற தெலுங்கு அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றுள்ளது. பாட்னா, பெங்களூரு, உ.பி. அணிகளிடம் ஏற்கனவே தோற்று இருந்தது.

    இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன.
    Next Story
    ×