search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி : பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது தமிழ்நாடு
    X

    முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி : பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது தமிழ்நாடு

    சென்னையில் நடைபெற்றுவரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்று போட்டியில் இன்று தமிழ்நாடு அணி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது.

    சென்னை:

    91-வது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் பத்து அணிகள் பங்குபெற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

    இன்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவின் லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியும் மோதின. இப்போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்தில் வங்கி அணியின் ஜஸ்கரண் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை கொடுத்தார். 

    அடுத்த நிமிடமே தமிழ்நாடு அணியின் சரவணகுமார் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழக அணி சிறப்பாக விளையாடியது, தமிழக அணியின் வீரத்தமிழன் 26-வது நிமிடத்திலும், 33வது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, 41வது நிமிடத்தில் வங்கி அணியின் ககன்பிரித் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன்மூலம் கோல் வித்தியாசம் 3-2 என குறைந்தது. அதன்பின்னர் இரு அணியினரும் இறுதிவரை வேறு கோல் அடிக்காததால், தமிழ்நாடு அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இத்தொடரின் இறுதிப்போட்டி வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது.
    Next Story
    ×