என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஷஸ் தொடரை வெல்ல ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது: கிளார்க் சொல்கிறார்
Byமாலை மலர்31 July 2017 3:37 PM GMT (Updated: 31 July 2017 3:37 PM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது என்று கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களின் சங்கத்திற்கும் இடையில் சம்பள பிரச்சினை இருந்து வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தீர்வுக் காணப்படாமல் இருக்கிறது.
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடுவதாக இருந்தது. இந்த பிரச்சினையால் தொடரை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
விரைவில் ஆஸ்திரேலிய சீனியர் அணி வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இது முடிந்த பின்னர், மிகப்பெரிய தொடரான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் வருகிறது. இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு மானப்பிரச்சினை தொடராகும்.
முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஒரு போட்டியை கூட மிஸ் செய்யக்கூடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கிளார்க் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது. அடுத்த மாதம் வங்காள தேசம் செல்ல வேண்டியது அவசியம். அதேபோல் அக்டோபர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா செல்ல வேண்டும். அதன்பின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அணியாக இணைந்து நாம் விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடுவதாக இருந்தது. இந்த பிரச்சினையால் தொடரை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
விரைவில் ஆஸ்திரேலிய சீனியர் அணி வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இது முடிந்த பின்னர், மிகப்பெரிய தொடரான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் வருகிறது. இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு மானப்பிரச்சினை தொடராகும்.
முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா ஒரு போட்டியை கூட மிஸ் செய்யக்கூடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கிளார்க் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யக்கூடாது. அடுத்த மாதம் வங்காள தேசம் செல்ல வேண்டியது அவசியம். அதேபோல் அக்டோபர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா செல்ல வேண்டும். அதன்பின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அணியாக இணைந்து நாம் விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X