search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் நாளை மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் நாளை மோதல்

    சென்னையில் நாளை நடக்கும் 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை, ஜூலை. 28

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ (டி.என்.பி. எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது.

    சென்னையில் நாளை நடக்கும் 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோது கின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கோபிநாத், தலைவன் சற்குணம், கார்த்திக், வசந்த், சரவணன், சசிதேவ் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்கள் உள்ளனர்.

    பந்துவீச்சில் அந்தோணி தாஸ், சாய்கிஷோர், யோ மகேஷ், அலெக்சாண்டர் ஆகியோர் இருக்கிறார்கள்.

    பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. அந்த அணியும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அந்த அணியில் அனிருத் சீத்தாராம், பிரகாஷ், ரன்ஜன் பால், ஹரீஷ்குமார், தீபன் லிங்கேர், விக்னேஷ், அஜித்ராம், சித்தார்த் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    நெல்லையில் இன்று நடக்கும் ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் 2 ஆட்டத்தில், ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுஇருக்கிறது.

    அந்தஅணி 2-வது வெற்றிக்காக கடுமையாக போராடும். திருவள்ளூர் வீரன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்து இருக்கிறது.

    Next Story
    ×