என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீங்கள் தோற்கவில்லை: கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை
Byமாலை மலர்27 July 2017 10:42 PM GMT (Updated: 27 July 2017 10:42 PM GMT)
நீங்கள் தோற்கவில்லை என்று தன்னை சந்தித்த உலகக் கோப்பையில் பங்கேற்ற கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லி:
இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய பெண்கள் அணி நேற்று முன் தினம் அதிகாலை நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்ற கிரிக்கெட் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். அப்போது, நீங்கள் தோற்கவில்லை என்று தன்னை சந்தித்த வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், எண்ணம், உடல் மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பதற்கு யோகா உதவும் என்று மோடி கூறினார். பிரதமரை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் ஒன்றினை பரிசாக அளித்தனர்.
இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய பெண்கள் அணி நேற்று முன் தினம் அதிகாலை நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்ற கிரிக்கெட் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். அப்போது, நீங்கள் தோற்கவில்லை என்று தன்னை சந்தித்த வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், எண்ணம், உடல் மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பதற்கு யோகா உதவும் என்று மோடி கூறினார். பிரதமரை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் ஒன்றினை பரிசாக அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X