என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி
Byமாலை மலர்23 July 2017 8:08 PM GMT (Updated: 23 July 2017 8:08 PM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்று நடந்த 2-வது லீக்கில் காரைக்குடி காளையும், கோவை கிங்சும் மோதின. டாஸ் ஜெயித்த காரைக்குடி கேப்டன் பத்ரிநாத் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து விஜய்குமாரும், அனிருதாவும் காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். விஜய்குமார் (0) ரன்-அவுட் ஆனார். இதன் பிறகு அனிருதாவும், கேப்டன் பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஸ்கோர் 72 ரன்களை எட்டிய போது பத்ரிநாத் 41 ரன்களில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் ரோகித்திடம் கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அனிருதா 52 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கணபதி 21 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 ரன்களும் எடுத்தனர். கோவை தரப்பில் சயத் முகமது, விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான அனிருத் சீத்தாராம் (45 ரன், 35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), சூர்யபிரகாஷ் (60 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டனர். கோவை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்று நடந்த 2-வது லீக்கில் காரைக்குடி காளையும், கோவை கிங்சும் மோதின. டாஸ் ஜெயித்த காரைக்குடி கேப்டன் பத்ரிநாத் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து விஜய்குமாரும், அனிருதாவும் காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். விஜய்குமார் (0) ரன்-அவுட் ஆனார். இதன் பிறகு அனிருதாவும், கேப்டன் பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஸ்கோர் 72 ரன்களை எட்டிய போது பத்ரிநாத் 41 ரன்களில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் ரோகித்திடம் கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அனிருதா 52 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கணபதி 21 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 ரன்களும் எடுத்தனர். கோவை தரப்பில் சயத் முகமது, விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான அனிருத் சீத்தாராம் (45 ரன், 35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), சூர்யபிரகாஷ் (60 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டனர். கோவை அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X