search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். சிறந்த வீரர்களை உருவாக்குகிறது: டோனி
    X

    டி.என்.பி.எல். சிறந்த வீரர்களை உருவாக்குகிறது: டோனி

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாகும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. தொடக்க விழாவில் சிக்சர் அடிக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    பவுலிங் எந்திரம் மூலம் தலா 3 முறை பந்துகள் வீசப்பட்டது. இதில் டோனி தான் சந்தித்த 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

    ஹைடன், பத்ரிநாத், அனிருதா தலா 2 சிக்சர் அடித்தனர். எல்.பாலாஜி ஒரு சிக்சர் அடித்தார். மொகித் சர்மா, பவான் நெகி, கணபதி ஆகியோர் சிக்சர் அடிக்கவில்லை. பின்னர் டோனி கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரு ஆண்டுக்கு முன்பு சேப்பாக்கத்தில் விளையாடினேன். மீண்டும் இங்கு பேட்டிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை அணி 2 ஆண்டாக விளையாடவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவும், எண்ணிக்கையும் குறையவில்லை.

    இந்திய அணிக்காக ஆடும்போதும், சென்னை அணிக்காக விளையாடும் போதும் சென்னை ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து இருக்கிறார்கள். இந்திய அணியின் நீலநிற சீருடை அணிவது என்பது விசே‌ஷமானது.

    அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற உடையும் விசே‌ஷமானது. சென்னை எனக்கு 2-வது தாய் வீடு ஆகும். சென்னையில் தான் எனது டெஸ்ட் அறிமுகம் நடந்தது.

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாகும். இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு நேரடியாக தகுதி பெற்று விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறது.

    முதல் நோக்கம் மாநில அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும். அதில் சிறப்பாக செயல்பட்டு துலிப் டிராபி, தியோதர் கோப்பை போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பின்னர் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×