search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்மன்பிரீத் கவுர் சாதனை
    X

    ஹர்மன்பிரீத் கவுர் சாதனை

    உலக கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் படைத்துள்ளார்.
    பஞ்சாப்பை சேர்ந்த 27 வயதான ஹர்மன்பிரீத் கவுர், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார். பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய வீராங்கனையின் 2-வது அதிகபட்சம் இதுவாகும். தீப்தி ஷர்மா கடந்த மே மாதம் அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    அதே சமயம் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. உலக கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹர்மன்பிரீத் கவுர் சொந்தக்காரர் ஆனார். 
    Next Story
    ×