search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி ‘லீக்’: தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுகம்
    X

    புரோ கபடி ‘லீக்’: தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அறிமுகம்

    புரோ கபடி ‘லீக்’ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது.
    சென்னை:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி வருகிற 28-ந்தேதி ஐதராபாததில் தொடங்குகிறது. அக்டோபர் 28-ந்தேதி வரை இந்தப்போட்டி 12 நகரங்களில் (ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர், புனே) நடக்கிறது.

    புரோ கபடி ‘லீக்’ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பங்கேற்கிறது. தமிழக கபடி ரசிகர்கள் இந்தப் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது. வீரர்களின் ஜெர்சியும் (பனியன்) லோகோவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இந்த அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் தலைவாஸ் அணியின் இணை உரிமையாளரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர், தமிழ் தலைவாஸ் அணியின் தூதர் நடிகர் கமலஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    அந்த அணியின் உரிமையாளர்களான நிம்ம கடா பிரசாத், சிரஞ்சீவி, அல்லு அரவிந்த், அல்லி அர்ஜூனா, ராம்சரண்தேஜா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×