search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஓபன் டென்னிஸ் புனேவுக்கு மாற்றம்?
    X

    சென்னை ஓபன் டென்னிஸ் புனேவுக்கு மாற்றம்?

    21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி புனேக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டியாகும். 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகள் சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடந்தது. தமிழக அரசு இந்தப்போட்டிக்கு நிதிஉதவி அளித்துவந்தது.

    இந்த நிலையில் இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி புனேக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. வர்த்தக நலன் கருதி இந்தப் போட்டியை சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்ற போட்டி அமைப்பு குழுவான ஐ.எம்.ஜி. திட்டமிட்டு உள்ளது.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையை விட்டு செல்வது உறுதியானது என்றார். இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஏடிபி டென்னிஸ் சென்னையில் இருந்து புனேக்கு மாற்றம் செய்யப்பட்டால் சென்னை டென்னிஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள்.
    Next Story
    ×