என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா- ஆஸி., இங்கிலாந்து- தெ.ஆ. பலப்பரீட்சை
Byமாலை மலர்16 July 2017 10:03 AM GMT (Updated: 16 July 2017 10:03 AM GMT)
பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானை இலங்கையும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தின.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவுற்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து 7 போட்டிகளில் 6 வெற்றி, 1 தோல்வியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 வெற்றி, 1 தோல்வியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா நான்கு வெற்றி, 2 தோல்விகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் விதிப்படி முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடனும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணி, 3-வது இடத்தை பிடிக்கும் அணியுடனும் மோத வேண்டும்.
அதன்படி 2-வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவும், 3-வது இடம் பிடித்துள்ள இந்தியாவும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. முதல் அரையிறுதியில் முதல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தும், 4-வது இடத்தை பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதியும், 2-வது அரையிறுதி 20-ந்தேதியும், இறுதிப் போட்டி 23-ந்தேதியும் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திவிட்டால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானை இலங்கையும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தின.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவுற்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து 7 போட்டிகளில் 6 வெற்றி, 1 தோல்வியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 வெற்றி, 1 தோல்வியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா நான்கு வெற்றி, 2 தோல்விகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் விதிப்படி முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடனும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணி, 3-வது இடத்தை பிடிக்கும் அணியுடனும் மோத வேண்டும்.
அதன்படி 2-வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவும், 3-வது இடம் பிடித்துள்ள இந்தியாவும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. முதல் அரையிறுதியில் முதல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தும், 4-வது இடத்தை பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதியும், 2-வது அரையிறுதி 20-ந்தேதியும், இறுதிப் போட்டி 23-ந்தேதியும் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திவிட்டால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X