search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெ.இண்டீஸ்சுக்கு எதிரான 2-வது போட்டி: ஆஸி. சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் அணி
    X

    வெ.இண்டீஸ்சுக்கு எதிரான 2-வது போட்டி: ஆஸி. சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி  105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா 300 ரன்னுக்கு மேல் குவித்ததன்மூலம், ஒருநாள் போட்டியில் அதிக முறை 300 ரன் எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.

    இந்தியா 96-வது முறையாக 300 ரன்னை தொட்டுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய 95 முறை 300 ரன் எடுத்து சாதனையாக இருந்தது. அதை இந்தியா முறியடித்தது.
    Next Story
    ×