search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 முறை தோல்விக்கு பதிலடி: சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்
    X

    5 முறை தோல்விக்கு பதிலடி: சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்

    ஆஸ்திரேலிய ஒபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
    சிட்னி:

    சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சீனாவின் சென் லாங் பலப்பரீட்சை நடத்தினர்.

    சென் லாங்கிடம் ஏற்கனவே 5 முறை ஸ்ரீகாந்த் தோற்றுள்ளதால், இந்த ஆட்டத்தில் அவர் தகுந்த பதிலடி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். முதல் செட்டில் இருவருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 22-20 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றினார். 

    இரண்டாவது செட் ஆட்டத்தில் சென் லாங் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியான ஷாட்களை அடித்து ஸ்ரீகாந்த் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 முறை தோல்விக்கு தகுந்த பதிலடியை ஸ்ரீகாந்த கொடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரிலும் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்ரீகாந்த்க்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×