என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்தது பி.சி.சி.ஐ
Byமாலை மலர்23 Jun 2017 7:46 PM GMT (Updated: 23 Jun 2017 7:47 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளதால், புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளதால், புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது.
இதற்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்தார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டு கொண்டது. அதற்கு அவரும் முதலில் சம்மதித்தார். ஆனால் அவர் திடீரென்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கிறது. விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியது உறுதியானது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளதால், புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது.
இதற்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்தார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டு கொண்டது. அதற்கு அவரும் முதலில் சம்மதித்தார். ஆனால் அவர் திடீரென்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கிறது. விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியது உறுதியானது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X