என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி
Byமாலை மலர்23 Jun 2017 4:14 AM GMT (Updated: 23 Jun 2017 6:35 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரரான ஸ்ரீகாந்த், உலகின் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவை (தென்கொரியா) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை இழந்தாலும், அடுத்த 2 செட்களில் அபாரமாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வெற்றியை தனதாக்கினார். 57 நிமிடம் நடந்த இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யுசியாங்கை தோற்கடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 64 நிமிடங்கள் தேவைப்பட்டது. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-சாய் பிரனீத் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதுவரை இருவரும் 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் சாய் பிரனீத் 5-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13, 21-18 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை சென் ஸ்சியாவ்சின்னை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் போராடி மலேசியாவின் சோனியா செயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரரான ஸ்ரீகாந்த், உலகின் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவை (தென்கொரியா) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை இழந்தாலும், அடுத்த 2 செட்களில் அபாரமாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வெற்றியை தனதாக்கினார். 57 நிமிடம் நடந்த இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யுசியாங்கை தோற்கடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 64 நிமிடங்கள் தேவைப்பட்டது. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-சாய் பிரனீத் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதுவரை இருவரும் 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் சாய் பிரனீத் 5-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13, 21-18 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை சென் ஸ்சியாவ்சின்னை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் போராடி மலேசியாவின் சோனியா செயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X