என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, அதில் உறுதியாக நிற்கவில்லை: கவாஸ்கர்
Byமாலை மலர்21 Jun 2017 12:42 PM GMT (Updated: 21 Jun 2017 12:42 PM GMT)
போராட்ட குணம் நிறைந்த கும்ப்ளே, தனது நிலையில் உறுதியாக இல்லாததை முதன்முதலாக பார்க்கிறேன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
ஆனால் கும்ப்ளே நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். எனக்கும், விராட் கோலிக்கும் இடையிலும் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார்.
தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன்’’ என்றார்.
அனில் கும்ப்ளே விவகாரம் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். ஆனால், இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சோகம். அனில் குமப்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
எல்லா அணிகளிலும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இந்த முடிவை நாம் பார்க்கிறோம். அனில் கும்ப்ளே விலக காரணம் இருந்திருக்கும். கும்ப்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மீண்டும் அவர் வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முதல் முறையாக கும்ப்ளே போன்ற போராட்ட குணம் படைத்தவர்கள், அந்த நிலையில் உறுதியாக இல்லாமல் உள்ளனர்’’ என்றார்.
ஆனால் கும்ப்ளே நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். எனக்கும், விராட் கோலிக்கும் இடையிலும் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார்.
தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன்’’ என்றார்.
அனில் கும்ப்ளே விவகாரம் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். ஆனால், இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சோகம். அனில் குமப்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
எல்லா அணிகளிலும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இந்த முடிவை நாம் பார்க்கிறோம். அனில் கும்ப்ளே விலக காரணம் இருந்திருக்கும். கும்ப்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. மீண்டும் அவர் வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முதல் முறையாக கும்ப்ளே போன்ற போராட்ட குணம் படைத்தவர்கள், அந்த நிலையில் உறுதியாக இல்லாமல் உள்ளனர்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X