search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரி ஏய்ப்பு புகார்: ஜூலை 31-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக ரொனால்டோவிற்கு உத்தரவு
    X

    வரி ஏய்ப்பு புகார்: ஜூலை 31-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக ரொனால்டோவிற்கு உத்தரவு

    வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூலை 31-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
    போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவரின் சிறந்த ஆட்டத்தால் இந்த சீசனில் லா லிகா கோப்பையும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையும் ரியல் மாட்ரிட் கைப்பற்றியது.



    ரொனால்டோ கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2014 வரை அவரது படத்தின் உரிமம் சம்பாதித்த வருமானத்தில் வரிஏய்ப்பு நடத்தியதாக ஸ்பெயின் நாட்டின் வருமான வரித்துறை கடந்த 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. அதில் சுமார் 14.7 மில்லியன் யூரோக்கள் வரை வரிஏய்ப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்காக அடுத்த மாதம் 31-ந்தேதி கோரட்டில் ஆஜராகும்படி ரொனால்டோவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×