search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில ஊசூ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள்
    X

    மாநில ஊசூ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள்

    மாநில ஊசூ (தற்காப்பு கலை) ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் பி.ஹரிஸ் 3 தங்கப்பதக்கமும், பி.அருண்குமார் 2 தங்கப்பதக்கமும், ஆர்.ரிஷிகுமார் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
    திண்டுக்கல் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016-17-ம் ஆண்டுக்கான மாநில ஊசூ (தற்காப்பு கலை) போட்டி கோவையில் கடந்த 10, 11-ந் தேதிகளில் நடந்தது.

    இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் பி.ஹரிஸ் 3 தங்கப்பதக்கமும், பி.அருண்குமார் 2 தங்கப்பதக்கமும், ஆர்.ரிஷிகுமார் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதேபோல சீனியர் பிரிவில் கலந்து கொண்ட மாணவர்கள் எஸ்.அரவிந்த் ஸ்ரீராம், எஸ்.கிஷோர்குமார், வி.சீனிவாசன் ஆகியோர் 3 தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

    சாதனை படைத்த வீரர்களை, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன், ஊசூ பயிற்சியாளர் சாலமன் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×