என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: நாகர்கோவில் அணி சாம்பியன்
Byமாலை மலர்20 Jun 2017 3:09 AM GMT (Updated: 20 Jun 2017 3:09 AM GMT)
மாநில அளவிலான ஐவர் கால்பந்து இறுதிப்போட்டியில் நாகர்கோவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. ஸ்டார் கால்பந்து கழகம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றன. இதில் திண்டுக்கல் நண்பர்கள் கால்பந்து அணியும், நாகர்கோவில் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் நாகர்கோவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி 3-வது இடத்தை பிடித்தது. சாம்பியன் பட்டம் பெற்ற நாகர்கோவில் அணிக்கு பரிக்கோப்பையுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2-வது இடம்பிடித்த திண்டுக்கல் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை சுரபி கல்லூரி தலைவர் ஜோதிமுருகன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் யூசுப் அன்சாரி ஆகியோர் வழங்கினர். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் கால்பந்து கழக செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வீரர்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. ஸ்டார் கால்பந்து கழகம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றன. இதில் திண்டுக்கல் நண்பர்கள் கால்பந்து அணியும், நாகர்கோவில் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் நாகர்கோவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி 3-வது இடத்தை பிடித்தது. சாம்பியன் பட்டம் பெற்ற நாகர்கோவில் அணிக்கு பரிக்கோப்பையுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2-வது இடம்பிடித்த திண்டுக்கல் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை சுரபி கல்லூரி தலைவர் ஜோதிமுருகன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் யூசுப் அன்சாரி ஆகியோர் வழங்கினர். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் கால்பந்து கழக செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வீரர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X