என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை வீழ்த்தி பழிதீர்க்க இறுதிப் போட்டி கோல்டன் வாய்ப்பு: இம்ரான் கான்
Byமாலை மலர்17 Jun 2017 1:12 PM GMT (Updated: 17 Jun 2017 1:12 PM GMT)
தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக அடைந்த மோசமான தோல்விக்கு பழிக்குப்பழி வாங்க இறுதிப் போட்டி சரியான வாய்ப்பு என இம்ரான் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துக்கின்றன.
இந்த போட்டி குறித்து முன்னணி வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தொடக்க போட்டியில் தோல்வியடைந்ததற்கு பழிக்குப்பழி வாங்க இறுதிப்போட்டி பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த கோல்டன் வாய்ப்பு என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் மேலும் கூறுகையில் ‘‘நம்முடைய பெருமையை திரும்பப் பெற சிறந்த வாய்பை பெற்றுள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், முதல் போட்டியில் நாம் இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளோம். நாம் எப்படி தோல்வியடைந்து அவமானம் அடைந்தோமோ, அதில் இருந்து திரும்ப முடியும்.
இந்திய அணி மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. அவர்கள் பெரிய ஸ்கோர் அடித்தால், பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். மற்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் மேற்கொண்ட பீல்டிங் அமைப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவரின் சில தீர்க்கமான முடிவு என்னை மிகவும் கவர்ந்தது’’ என்றார்.
இந்த போட்டி குறித்து முன்னணி வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தொடக்க போட்டியில் தோல்வியடைந்ததற்கு பழிக்குப்பழி வாங்க இறுதிப்போட்டி பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த கோல்டன் வாய்ப்பு என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் மேலும் கூறுகையில் ‘‘நம்முடைய பெருமையை திரும்பப் பெற சிறந்த வாய்பை பெற்றுள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், முதல் போட்டியில் நாம் இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளோம். நாம் எப்படி தோல்வியடைந்து அவமானம் அடைந்தோமோ, அதில் இருந்து திரும்ப முடியும்.
இந்திய அணி மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. அவர்கள் பெரிய ஸ்கோர் அடித்தால், பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். மற்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் மேற்கொண்ட பீல்டிங் அமைப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவரின் சில தீர்க்கமான முடிவு என்னை மிகவும் கவர்ந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X