search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்கள் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்: விராட் கோலி
    X

    வீரர்கள் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்: விராட் கோலி

    ‘ஏ’ கிரேடு வீரர்கள் சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அறிவித்தது. அதன்படி ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டது.

    ‘ஏ’ கிரேடில் விராட் கோலி, டோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் வீரர்களுக்கான சம்பளம் போதாது என்றும் அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீரர்கள் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×