search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் சுந்தரம் ரவி நடுவராக பணியாற்றுகிறார்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் சுந்தரம் ரவி நடுவராக பணியாற்றுகிறார்

    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடுவராக பணியாற்ற இந்தியாவின் சுந்தரம் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் நடுவராக பணியாற்றுபவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் இந்தியாவின் சுந்தரம் ரவியின் பெயரும் இடம்பிடித்துள்ளது. தொடரின் முதல் போட்டியான ஜூன் 1-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் மைதான நடுவராக பணியாற்றுகிறார். இவருடன் ராட் டக்கரும் கள நடுவராக செயல்படுவார்.



    ஜூன் 5-ந்தேதி நடைபெறும் ஆஸ்திரேலியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரவி நான்காவது நடுவராக பணியாற்றுகிறார். ஜூன் 7-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மைதான நடுவராக செயல்படுகிறார். 10-ந்தேதி நடக்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டியில் 3-வது நடுவராக செயல்படுகிறார்.
    Next Story
    ×