என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் தோல்வியில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்: சஞ்சு சாம்சன் சொல்கிறார்
Byமாலை மலர்29 April 2017 1:05 PM GMT (Updated: 29 April 2017 1:05 PM GMT)
கொல்கத்தா அணிக்கெதிரான தோல்வி உள்பட தொடர் தோல்வியில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 7 போட்டியில் ஏறக்குறைய 6 போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் டெல்லி அணியால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆனால், தொடர் தோல்வியில் இருந்து தங்களால் மீள முடியும் என்று, ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சார்பில் 38 பந்தில் 60 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போன்ற விளையாட்டில், வெற்றியை விட தோல்விகள் அதிக அளவில் இருக்கும். விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில், தோல்வியில் இருந்து எப்படி மீள வேண்டும் என்று நமக்கெல்லாம் தெரியும். இதே எண்ணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டியது அவசியம்.
வாழ்க்கையிலும் ஏராளமான தோல்விகள் ஏற்படும். ஆனால், நமக்கும் நம்பிக்கை தேவை. நாம் நேர்மறையான மனநிலையுடன் செல்ல வேண்டும். நமக்குள்ளாகவே சவால்களை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான திசையை நோக்கி முன்னேற வேண்டும்’’ என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 7 போட்டியில் ஏறக்குறைய 6 போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் டெல்லி அணியால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆனால், தொடர் தோல்வியில் இருந்து தங்களால் மீள முடியும் என்று, ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சார்பில் 38 பந்தில் 60 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போன்ற விளையாட்டில், வெற்றியை விட தோல்விகள் அதிக அளவில் இருக்கும். விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில், தோல்வியில் இருந்து எப்படி மீள வேண்டும் என்று நமக்கெல்லாம் தெரியும். இதே எண்ணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டியது அவசியம்.
வாழ்க்கையிலும் ஏராளமான தோல்விகள் ஏற்படும். ஆனால், நமக்கும் நம்பிக்கை தேவை. நாம் நேர்மறையான மனநிலையுடன் செல்ல வேண்டும். நமக்குள்ளாகவே சவால்களை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான திசையை நோக்கி முன்னேற வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X