search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபிகா பலிக்கல் பந்தை அடித்த போது எடுத்த படம்.
    X
    தீபிகா பலிக்கல் பந்தை அடித்த போது எடுத்த படம்.

    ஆசிய ஸ்குவாஷ் போட்டி: தீபிகா, ஜோஸ்னா, கோஷல் அரைஇறுதிக்கு தகுதி

    சென்னையில் நடந்து வரும் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தீபிகா, ஜோஸ்னா, கோஷல் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளர்.
    சென்னை :

    19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 11-3, 11-6, 11-6 என்ற நேர் செட்டில் 27 நிமிடங்களில் லியூ டஸ் லிங்கை (ஹாங்காங்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    சென்னையைச் சேர்ந்த தீபிகா அடுத்து ஹாங்காங் வீராங்கனை அனி அவ்-ஐ எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா (இந்தியா) 11-7, 11-3, 9-11, 12-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசாகியை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

    ஆண்கள் பிரிவில் இந்திய முன்னணி வீரர் சவுரவ் கோஷல் 11-7, 11-7, 11-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் விக்ரம் மல்ஹோத்ராவை தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தார். அதே சமயம் இன்னொரு இந்திய வீரர் ஹரிந்தர் பால்சிங் சந்து 8-11, 9-11, 8-11 என்ற நேர் செட்டில் மேக்ஸ் லீயிடம் (ஹாங்காங்) வீழ்ந்தார்.
    Next Story
    ×