search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20-யில் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்: பஞ்சாப் வீரர் மனன் வோரா சொல்கிறார்
    X

    டி20-யில் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்: பஞ்சாப் வீரர் மனன் வோரா சொல்கிறார்

    டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது பேட்ஸ்மேனுக்கு மிகவும் கடினமானது என்று பஞ்சாப் அணி தொடக்க வீரர் வோரா கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி வருபவர் மனன் வோரா. பஞ்சாப் அணி தொடக்கத்தில் விரைவாக ரன்கள் சேர்க்க இவர் முக்கிய காரணமாக விளங்குகிறார். ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 154 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 5 ரன்களில் தோல்வியடைந்தாலும், இந்த போட்டியில் வோரா 50 பந்தில் 95 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டிக்குப்பின் மும்பை அணிக்கெதிராக களம் இறங்கவில்லை. குஜராத் அணிக்கெதிராக 2 ரன்னில் அவுட்டானார். இன்று 8 மணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் கடினம் என்று வோரா குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து வோரா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சு மீது கவனம் செலுத்த அதிக நேரம் கிடைக்காது. நம் கண்முன் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு பந்து எப்படி வருகிறது என்பதை கணிக்க இயலாது. ஆகவே, எப்படியான சூழ்நிலையாக இருந்தாலும், அதற்கேற்ற வகையில் விளையாடுவதற்கு தங்களை தயார் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது. டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம்’’ என்றார்.
    Next Story
    ×