என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்26 April 2017 10:21 AM GMT (Updated: 26 April 2017 10:21 AM GMT)
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
உகான்:
சீனாவின் உகான் நகரில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சயாகா சாடோவிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.‘
அடுத்து, மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில், ஒலிம்பிக் நாயகியான பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை தினார் தியா ஆயுஸ்டினை எதிர்கொண்டார். உலகின் மூன்றாம் தரநிலை வீராங்கனையான சிந்து, துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிராளியை திணறடித்தார். இதனால், வெறும் 31 நிமிடங்களில் 21-8, 21-18 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற சிந்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், 5-ம் தரநிலை வீரரான ஹூவேய் டியான் (சீனா) என்பவரை 21-18 18-21 21-19 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, 15-21 21-14 16-21 என்ற செட்கணக்கில் சிவேய் ஜெங்-கிங்சென் சென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
சீனாவின் உகான் நகரில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சயாகா சாடோவிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.‘
அடுத்து, மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில், ஒலிம்பிக் நாயகியான பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை தினார் தியா ஆயுஸ்டினை எதிர்கொண்டார். உலகின் மூன்றாம் தரநிலை வீராங்கனையான சிந்து, துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிராளியை திணறடித்தார். இதனால், வெறும் 31 நிமிடங்களில் 21-8, 21-18 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற சிந்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், 5-ம் தரநிலை வீரரான ஹூவேய் டியான் (சீனா) என்பவரை 21-18 18-21 21-19 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, 15-21 21-14 16-21 என்ற செட்கணக்கில் சிவேய் ஜெங்-கிங்சென் சென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X