என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்: ஐதராபாத் - பெங்களூர் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து
Byமாலை மலர்25 April 2017 6:58 PM GMT (Updated: 25 April 2017 6:58 PM GMT)
ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஐதராபாத்:
10-வது ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடக்க இருந்தது.
பெங்களூரில் மழை பெய்து கொண்டிருந்ததால் முதலில் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத், டெல்லி அணிகளை வென்று இருந்தது. ஐதராபாத், புனே, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது.
ஐதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர், குஜராத், பஞ்சாப், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. மும்பை, கொல்கத்தா, புனே அணிகளிடம் தோற்று இருந்தது.
இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ஐதராபாத் அணி 9 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
10-வது ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடக்க இருந்தது.
பெங்களூரில் மழை பெய்து கொண்டிருந்ததால் முதலில் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத், டெல்லி அணிகளை வென்று இருந்தது. ஐதராபாத், புனே, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது.
ஐதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர், குஜராத், பஞ்சாப், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. மும்பை, கொல்கத்தா, புனே அணிகளிடம் தோற்று இருந்தது.
இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ஐதராபாத் அணி 9 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X