என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை அணியை 3 ரன்களில் வீழ்த்தி புனே ஹாட்ரிக் வெற்றி
Byமாலை மலர்24 April 2017 6:32 PM GMT (Updated: 24 April 2017 6:32 PM GMT)
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
பின்னர் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 45(31), அஜய் ரகானே 38(32) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் மும்பை அணி தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தற்போது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.
அற்புதமாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். அவர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
பின்னர் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 45(31), அஜய் ரகானே 38(32) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் மும்பை அணி தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தற்போது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.
அற்புதமாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். அவர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X