search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள்: மும்பை கேப்டன் ரோகித் சர்மா
    X

    எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள்: மும்பை கேப்டன் ரோகித் சர்மா

    எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே நல்ல பார்மில் இருக்கிறார்கள் என்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6-வது வெற்றியை பெற்றுள்ள மும்பை கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
    மும்பை :

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தன. 24 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து விழிபிதுங்கிய டெல்லி அணியை கரைசேர்க்க ரபடா (44 ரன்), கிறிஸ் மோரிஸ் (52 ரன், நாட்-அவுட்) கடுமையாக போராடிய போதிலும் பலன் இல்லை. டெல்லி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது.



    6-வது வெற்றிக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘142 ரன்களை கொண்டு இந்த மைதானத்தில் வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. ஆனாலும் எங்களது பந்து வீச்சாளர்களால் முடியும் என்று நம்பினோம்.

    அவர்கள் வெற்றியை தேடித்தந்திருக்கிறார்கள். பேட்டிங்கில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதற்காக பேட்ஸ்மேன்களை குறை சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே நல்ல பார்மில் இருக்கிறார்கள்.’ என்றார்.
    Next Story
    ×