என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்.: குஜராத் லயன்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Byமாலை மலர்23 April 2017 12:07 PM GMT (Updated: 23 April 2017 12:07 PM GMT)
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் போட்டியில் அம்லா, மேக்ஸ்வெல், அக்சார் பட்டேல் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வோரா, அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வோரா இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் களம் இறங்கினார். இவர் அம்லாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
24 பந்தில் 30 ரன்கள் எடுத்த ஷேன் மார்ஷ் டை பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அம்லா 40 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் வெளியேறினார். மேக்ஸ்வெல் அவுட்டாகும்போது பஞ்சாப் அணி 14.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.
அக்சார் பட்டேலின் (16 பந்தில் 34 ரன்) அதிரடியால் பஞ்சாப் அணி கடைசி 34 பந்தில் 56 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்துள்ளது.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வோரா, அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வோரா இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் களம் இறங்கினார். இவர் அம்லாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
24 பந்தில் 30 ரன்கள் எடுத்த ஷேன் மார்ஷ் டை பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அம்லா 40 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் வெளியேறினார். மேக்ஸ்வெல் அவுட்டாகும்போது பஞ்சாப் அணி 14.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.
அக்சார் பட்டேலின் (16 பந்தில் 34 ரன்) அதிரடியால் பஞ்சாப் அணி கடைசி 34 பந்தில் 56 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்துள்ளது.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X