search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பை ஹாக்கி தொடர்: பாக். பங்கேற்பதால் இந்திய ஜூனியர் அணி விலகல்
    X

    சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பை ஹாக்கி தொடர்: பாக். பங்கேற்பதால் இந்திய ஜூனியர் அணி விலகல்

    பாகிஸ்தான் அணி பங்கேற்பதால் மலேசியாவில் நடைபெற இருக்கும் சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா விலகியுள்ளார்.
    8 அணிகள் பங்கேற்கும் 21 வயதிற்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோஹோர் ஹாக்கி தொடர் மலேசியாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் கலந்து கொள்கிறது. இதனால் இந்தியா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

    2014-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்வரை பாகிஸ்தானுடன் ஹாக்கி போட்டி கிடையாது என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. இதன்படி சுல்தான் ஆஃப் ஜோஹோர் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

    கடந்த ஆண்டு உ.பி. தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×