search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து நோசோமி ஒகுஹராவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    சிங்கப்பூர் :

    சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் 10-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 62 நிமிடம் தேவைப்பட்டது.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய் பிரனீத் (இந்தியா) 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் இமில் ஹோல்ஸ்டையும் (டென்மார்க்), ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 21-11 என்ற நேர்செட்டில் கென்டா நிஷிமோடோவையும் (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர். அஜய் ஜெயராம், சமீர் வர்மா, சவுரவ் வர்மா ஆகிய இந்தியர்கள் தோல்வி கண்டு வெளியேறினர்.
    Next Story
    ×