என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணம்: லியாண்டர் பெயஸ்
Byமாலை மலர்7 April 2017 5:20 AM GMT (Updated: 7 April 2017 5:20 AM GMT)
மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கழற்றி விடப்பட்ட லியாண்டர் பெயஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் லியாண்டர் பெயஸ் கடைசி நேரத்தில் விளையாடாத கேப்டன் மகேஷ்பூபதியால் கழற்றி விடப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் இந்த நீக்கம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
நீக்கத்தால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் 43 வயதான லியாண்டர் பெயஸ், மகேஷ்பூபதி மீது கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து லியாண்டர் பெயஸ் அளித்த பேட்டியில், ‘நான் நேற்றைய (நேற்று முன்தினம்) பயிற்சியின் போது பந்தை நன்றாக அடித்து ஆடினேன். வீரர்கள் தேர்வு முறையில் உள்ள அடிப்படை விதிகளை மீறி தேர்வு நடந்து இருக்கிறது.
மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அணியை தேர்வு செய்ய மகேஷ்பூபதிக்கு உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அவர் யாருக்கு எதிராகவும் தனிப்பட்ட வெறுப்பை காட்டக்கூடாது. ஒருநேரத்தில் தரவரிசையின் அடிப்படையிலும், மற்றொரு நேரத்தில் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
தற்போதைய பார்மின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் யார் சிறப்பாக விளையாடுவார் என்பது தெரிந்து இருக்கும். நாடு மற்றும் ஆட்டத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாகவே மெக்சிகோவில் விளையாடிய நான் இங்கு வந்து இருக்கிறேன். கடினமாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். இந்திய அணியில் இடம்பெறுவதை தனிநபர்கள் யாராலும் தடுத்து விட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
நீக்கத்தால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் 43 வயதான லியாண்டர் பெயஸ், மகேஷ்பூபதி மீது கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து லியாண்டர் பெயஸ் அளித்த பேட்டியில், ‘நான் நேற்றைய (நேற்று முன்தினம்) பயிற்சியின் போது பந்தை நன்றாக அடித்து ஆடினேன். வீரர்கள் தேர்வு முறையில் உள்ள அடிப்படை விதிகளை மீறி தேர்வு நடந்து இருக்கிறது.
மகேஷ்பூபதியுடனான கசப்பான உறவு எனது நீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அணியை தேர்வு செய்ய மகேஷ்பூபதிக்கு உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அவர் யாருக்கு எதிராகவும் தனிப்பட்ட வெறுப்பை காட்டக்கூடாது. ஒருநேரத்தில் தரவரிசையின் அடிப்படையிலும், மற்றொரு நேரத்தில் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
தற்போதைய பார்மின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் யார் சிறப்பாக விளையாடுவார் என்பது தெரிந்து இருக்கும். நாடு மற்றும் ஆட்டத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாகவே மெக்சிகோவில் விளையாடிய நான் இங்கு வந்து இருக்கிறேன். கடினமாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். இந்திய அணியில் இடம்பெறுவதை தனிநபர்கள் யாராலும் தடுத்து விட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X