search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஹானே கேப்டனாக நீடிக்க வேண்டும்: ஜான்சன்
    X

    ரஹானே கேப்டனாக நீடிக்க வேண்டும்: ஜான்சன்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய வீரர்களுடன் இனி நட்புறவுக்கு இடமில்லை என்று விராட் கோலி கூறியதும், அதை மையமாக வைத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் இந்திய அணிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டும். இது ஒரு கடினமான தொடராக அமைந்தது.



    வீரர்களுக்கு இடையேயான பிரச்சினை களத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதனை வெளியில் தொடரக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

    வழக்கமான கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடைசி டெஸ்டில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×