என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுவரை அவமதித்த விவகாரம்: 4 சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்சிக்கு தடை
Byமாலை மலர்28 March 2017 4:04 PM GMT (Updated: 28 March 2017 4:04 PM GMT)
நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக, பார்சிலோனா வீரர் மெஸ்சி உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயனல் மெஸ்சி. இவர், தற்போது அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. இப்போட்டியின்போது போட்டியின் துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தினார். இது நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால், பிபாவின் ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் முடிவில் மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து பிபா உத்தரவிட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றில், பொலிவியாவுக்கு எதிராக அர்ஜென்டினா இன்று விளையாடுகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், மெஸ்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், அவரால் இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தடை முடிந்து அக்டோபர் 10-ம் தேதி அர்ஜென்டினாவின் இறுதி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மெஸ்சி விளையாடுவார்.
அதேசமயம் தடையை எதிர்த்து மெஸ்சியும் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. இப்போட்டியின்போது போட்டியின் துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தினார். இது நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால், பிபாவின் ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் முடிவில் மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து பிபா உத்தரவிட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றில், பொலிவியாவுக்கு எதிராக அர்ஜென்டினா இன்று விளையாடுகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், மெஸ்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், அவரால் இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தடை முடிந்து அக்டோபர் 10-ம் தேதி அர்ஜென்டினாவின் இறுதி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மெஸ்சி விளையாடுவார்.
அதேசமயம் தடையை எதிர்த்து மெஸ்சியும் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X