என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூழ்நிலைகளை கையாளுவது குறித்து இந்திய அணி கற்றுக்கொடுத்தது: ஸ்டீவ் ஸ்மித்
Byமாலை மலர்28 March 2017 11:23 AM GMT (Updated: 28 March 2017 11:23 AM GMT)
பல்வேறு சூழ்நிலைகளை கையாளுவது குறித்து இந்திய அணி தனக்கு கற்றுக் கொடுத்ததாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தரம்சாலா:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சூழ்நிலைகளை எப்படிக் கையாளுவது என இந்திய அணி தனக்கு கற்றுக்கொடுத்தாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இந்தத் தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடியது. நான் அவர்களிடமிருந்து சில விஷயங்களை நன்றாக கற்றுக்கொண்டேன். சில சந்தர்ப்பங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டு எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தொடரில் எனது திறமையை நினைத்து நான் சிறிதளவு பெருமைப்படுகிறேன். கேப்டன் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் சில விஷயங்களை நான் கற்று வருகிறேன். (இந்தத் தொடரில் ஸ்மித் 499 ரன்களைக் குவித்துள்ளார்)
தொடரை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சிறந்த முறையில் விளையாடி, ஒவ்வொரு டெஸ்ட்டிலும் எங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினோம். இதற்காக, எனது அணி வீரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
கடைசி தொடரில் 400-450 ரன்களைக் குவித்திருந்தால் இந்த ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு நேர்மாறாக 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது.
இந்தத் தொடரை நாங்கள் 0-4 என்ற கணக்கில் இழந்து விடுவோம் என நினைத்தோம். ஆனால் அதுபோல எதுவும் நிகழவில்லை. ஒரு அற்புதமான தொடரை சிறந்த முறையில் நாங்கள் விளையாடியிருக்கிறோம். இந்த பெருமை அனைத்தும் இந்திய அணியையே சேரும்” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சூழ்நிலைகளை எப்படிக் கையாளுவது என இந்திய அணி தனக்கு கற்றுக்கொடுத்தாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இந்தத் தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடியது. நான் அவர்களிடமிருந்து சில விஷயங்களை நன்றாக கற்றுக்கொண்டேன். சில சந்தர்ப்பங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டு எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தொடரில் எனது திறமையை நினைத்து நான் சிறிதளவு பெருமைப்படுகிறேன். கேப்டன் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் சில விஷயங்களை நான் கற்று வருகிறேன். (இந்தத் தொடரில் ஸ்மித் 499 ரன்களைக் குவித்துள்ளார்)
தொடரை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சிறந்த முறையில் விளையாடி, ஒவ்வொரு டெஸ்ட்டிலும் எங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினோம். இதற்காக, எனது அணி வீரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
கடைசி தொடரில் 400-450 ரன்களைக் குவித்திருந்தால் இந்த ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு நேர்மாறாக 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது.
இந்தத் தொடரை நாங்கள் 0-4 என்ற கணக்கில் இழந்து விடுவோம் என நினைத்தோம். ஆனால் அதுபோல எதுவும் நிகழவில்லை. ஒரு அற்புதமான தொடரை சிறந்த முறையில் நாங்கள் விளையாடியிருக்கிறோம். இந்த பெருமை அனைத்தும் இந்திய அணியையே சேரும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X