search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக ஐ.சி.சி. தலைவராக இருக்க ஷஷாங்க் மனோகர் சம்மதம்
    X

    தற்காலிக ஐ.சி.சி. தலைவராக இருக்க ஷஷாங்க் மனோகர் சம்மதம்

    தற்காலிக ஐ.சி.சி. தலைவராக இருக்க இந்தியாவின் முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷாங்க் மனோகர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராக ஷஷாங்க் மனோகர் ஐ.சி.சி.யின் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த 15-ந்தேதி திடீரென தனது ஐ.சி.சி.யின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தனது தனிப்பட்ட காரணத்திற்காகத்தான் பதவியை ராஜினாமா செய்தேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.



    ஷஷாங்க் மனோகரின் ராஜினாமா மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சி அளித்தது. தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியம், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகமாக அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ஷஷாங்க் மனோகருக்கு கோரிக்கை வைத்தது.

    இதை ஏற்றுக் கொண்ட ஷஷாங்க் மனோகர், புதுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகமாக இந்த பதவியில் நீடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
    Next Story
    ×