என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடரை வென்றால் புனித கோப்பையை அடைவதாகும்: ஆலன் பார்டர் சொல்கிறார்
Byமாலை மலர்24 March 2017 11:16 AM GMT (Updated: 24 March 2017 11:16 AM GMT)
தரம்சாலா போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், ஆஸ்திரேலியா புனித கோப்பையை அடைவது போன்றதாகும் என்று ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பார்டர் - கவாஸ்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, டிரா மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் நாளை தொடங்க இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியின் மீது அனைவரது பார்வையும் விழுந்துள்ளது.
இந்நிலையில், தரம்சாலா போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினால், ஆஸ்திரேலியா புனித கோப்பையை அடைவதாகும் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றினால், இதுவரை எந்த அணியும் செய்யாத மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றுவது ஆஸ்திரேலியாவிற்கு புனித கோப்பையை அடைவது போன்றதாகும். அது நம்ப முடியாததாகவும் இருக்கும்’’ என்றார்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, டிரா மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் நாளை தொடங்க இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியின் மீது அனைவரது பார்வையும் விழுந்துள்ளது.
இந்நிலையில், தரம்சாலா போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினால், ஆஸ்திரேலியா புனித கோப்பையை அடைவதாகும் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றினால், இதுவரை எந்த அணியும் செய்யாத மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றுவது ஆஸ்திரேலியாவிற்கு புனித கோப்பையை அடைவது போன்றதாகும். அது நம்ப முடியாததாகவும் இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X